by puthiyavanadmin on | 2025-03-12 23:03:58
10-ம் வகுப்பு பொது தேர்வுக்காக படித்து வரும் மாணவனின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கவில்லை எனக் கூறி மாணவனின் பீடி சுற்றும் தாய் தமிழக அரசுக்கு கண்ணீருடன் கோரிக்கை...!
கரண்ட் கேட்டு கண்ணீர் விடும் தாய் YOUTUBE LINK
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தட்டார்மடம் ரஸ்தா பகுதியை சேர்ந்த தங்கப்பிராட்டி (52) என்பவர் அவரது கணவர் சேகருடன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் குடி பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் சேகர் கேரளாவில் ஐஸ் வியாபாரம் பார்த்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தங்கபிராட்டி பீடி சுற்றும் தொழில் செய்து தனது இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
தொடர்ந்து கடைசி மகன் சந்தோஷ் முத்துக்குமார் சாத்தான்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து தற்போது பொது தேர்வுக்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் கடந்த 20 வருடங்களாக அந்த வீட்டிற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பித்தும் பலனில்லை. மேலும் மின்வாரிய அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி அவரது வீட்டிற்கு மின்சாரம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
எனினும் அவர் பீடி சுற்றியாவது தனது மகனை படிக்க வைத்து விட வேண்டும் என குறியாக இருக்கும் தங்கப்பிராட்டி, தனது வீட்டிற்கு மின்சாரம் வழங்கி தனது மகனின் கல்விக்கு உதவ வேண்டும் என தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek