by puthiyavanadmin on | 2025-02-09 16:35:02
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக பெற்றிருக்கும் இமாலய வெற்றி: அரசு மீது மக்கள்வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும்அறிக்கை:
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வி.சி.. சந்திரகுமார்91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் வைப்புத்தொகை இழந்துள்ளனர். பெரியார் குறித்த அவதூறுகளுக்கு அந்த தொகுதி மக்கள் வாக்குகளால் பதில் அளித்து இருக்கின்றனர். தமிழ்நாடு பெரியார் மண் தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த இமாலய வெற்றி அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கான அச்சாரமாகஇந்த இடைத்தேர்தலில் வெற்றி அமைந்திருக்கிறது. திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு தொகுதி மக்களுக்குமனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு, எம் எச் ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek