இந்தியா சென்னை

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை கோரி காங்கிரஸ் புகார் மனு!

by puthiyavanadmin on | 2024-05-24 17:50:53

Share: | | |


பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை கோரி காங்கிரஸ் புகார் மனு!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில், பிரதமர் நரேந்திர மோடி பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டில் உள்ளதாக கூறி, மறைமுகமாக தமிழர்களை திருடர்கள் என்று சொல்லாமல் சொல்லி பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார். 

இது இரு மாநில மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு அவதூறு பேச்சு மற்றும் தேச ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்க தூண்டுவதாக உள்ளது என்றும், இனி நடைபெறவிருக்கும் தேர்தல் கூட்டங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வதை முழுமையாக தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது. 

மாநில தேர்தல் அதிகாரி மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட புகார் மனுவை மூத்த பொதுச் செயலாளரும், வழக்கறிஞருமான டி.செல்வம், மூத்த வழக்கறிஞர் ஏ.பி. சூரியப்பிரகாசம், வழக்கறிஞர் துறை தலைவர் கே.சந்திரமோகன்,  இணைத் தலைவர் எஸ்.கே. நவாஸ், வி. இசட். விக்டர் ஆகியோர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek