by puthiyavanadmin on | 2023-11-23 13:37:16
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல் நலக்குறைவால் காலமானார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்தவர் பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர். தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிஆட்சி காலத்தில் தமிழக ஆளுநராக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாத்திமா பீவி, கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு வயது 96. அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek