by puthiyavanadmin on | 2024-12-08 11:07:40
தூத்துக்குடி மட்டக்கடை நாட்டுக்கோட்டை தெருவை சேர்ந்தவர் மீனவர் நிக்சன் வில்லவராயர் (54) இவருக்கு எமர்லின் ( 50 ) என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர், இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு வீட்டில் சண்டை போட்டுவிட்டு மன வருத்தத்தில் வெளியே சென்ற நிக்சன் வில்லவராயர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகு மீது அமர்ந்து இருந்தவர் எப்படியோ தவறி கடலில் விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
நேற்று இரவு அவரது உடல் கடலில் மிதந்த நிலையில் கிடந்தது இது குறித்த தகவலை அடுத்து தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் நட்டாத்தி தலைமையிலான அலுவலர்கள் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து மீனவர் நிக்சன் வில்லவராயர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து வழக்குபதிவு செய்து இன்று காலை விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek