தமிழ்நாடு சென்னை

திருவண்ணாமலையில் பாறை உருண்டு 7 பேர் உயிரிழப்பு: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

by puthiyavanadmin on | 2024-12-03 10:34:55

Share: | | |


திருவண்ணாமலையில் பாறை உருண்டு 7 பேர் உயிரிழப்பு:  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

திருவண்ணாமலையில் மலைஉருண்டு வீட்டின்மேல் விழுந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் , கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 5 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார் – மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் மண்ணுக்குள் புதையுண்டனர்.

அவர்கள் 7 பேரும் தற்போது உயிரிழந்து மீட்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். அனைவரும் உயிருடன் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில் பேரிடியாக இப்படி ஒரு செய்தி வந்திருப்பது மிகுந்த துயரத்தை தருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek