by puthiyavanadmin on | 2024-12-02 12:39:56
சுகுணா இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழாவில் முன்னிட்டு பள்ளி ஆசிரியர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
கோவை டாக்டர் காலனியில் உள்ள சுகுணா இன்டர்நேஷனல் பள்ளியின் ஆண்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற்றது. சுகுணா தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசுவாமி, தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், பள்ளியின் தாளாளர் சுகுணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
விழாவில் சிறப்பு விருந்தினராக சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் அல்லிராணி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் சிறந்து செயல்படும் ஆசிரியர்களும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து,
விழித்திரு மனிதனே விழித்திரு என்று தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு நாடகம் மாணவர்களின் தத்துவமான நடிப்பால் அரங்கேற்றப்பட்டது.
விழாவில்,சுகுணா குழுமங்களின் இணை நிர்வாக இயக்குநர் அனீஸ்குமார், சாந்தினி அனீஸ்குமார், சுகுணா பள்ளியின் இயக்குநர் அந்தோணிராஜ், முதல்வர் பத்மாவதி பஞ்சாபகேஷன், மழலையர் பள்ளியின் பொறுப்பாளர் இலட்சுமி ராமநாதன்,உட்பட பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek