by puthiyavanadmin on | 2024-08-19 23:01:45
தூத்துக்குடி அருகே தாய் கண் முன்னே மின்னல் தாக்கி மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் சோலைராஜ் (31), இவர் தந்தை முருகன் மற்றும் தாய் அனந்தம்மாள் ஆகியோருடன் குடும்பத்துடன் சேர்ந்து இப்பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி விறகுக்கரி மூட்டம் போடும் தொழில் செய்து வந்துள்ளனர். இன்று மாலை விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் விடாது கனமழை பெய்தது.
அப்போது, வீட்டில் இருந்த சோலைராஜ் மற்றும் தாய் அனந்தம்மாள் கரி மூட்டத்தில் இருந்த விறகுகள் தண்ணீரில் அடித்து செல்லக்கூடாது என்பதற்காக, மழையில் நனத்தப்படியே மாற்று வழி ஏற்பாடு செய்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது இடி, மின்னல் தாக்கியதில் சோலைராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் இருந்த தாய் அனந்தம்மாள் அக்கம், பக்கத்தினரை கூச்சலிட்டு அழைக்கவே உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோலைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னே நடந்து சென்ற சோலைராஜ் மீது தாய் அனந்தம்மாள் கண் முன்னே இடி, மின்னல் தாக்கி மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek